Wednesday, July 8, 2009

ஆரோக்கிய வாழ்விற்கு சிவப்பு வைன் (RED WINE)

நம்முடைய உணவுப்பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை. அவை காலநேர சூழலுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. பழையகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி புசித்த மனிதன், காலப்போக்கில் பயிரிட்டு கிடைக்கும் காய்கறி, பழங்கள் என உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டான். இன்றைக்கும் சில உணவுப் பழக்கங்களை நாம் மோசமானது என்று விலக்கிக் கொண்டிருக்கிறோம். அவற்றை எந்தக்காலத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவு செய்து தவிர்த்து விடுகின்றோம். ஆனால் அவற்றை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாப்பிடலாம் என்று டிக்' அடிக்கின்றனர்! உதாரணத்திற்கு இங்கே சில உணவுகளை கொடுத்துள்ளோம். அவற்றை எதற்காக சாப்பிடலாம் என்றும் காரணத்தை விளக்குகின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

சிவப்பு வைன்:(Red Wine)

பொதுவாகவே மது வகைகள் என்றால் அவை உடல் நலத்திற்கு கேடுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எந்த விஷயத்திற்கும் விதிவிலக்கு ஒன்று இருக்குமல்லவா... அப்படித்தான் மதுவகைகளில் ஒன்றான சிவப்பு வைன் உடல் நலத்திற்கு நல்லது! உடல் நலத்திற்கு மட்டுமல்ல... மனசுக்கும் மிகவும் நல்லது என்று நிரூபிக்கபட்டுள்ளது.

சிவப்பு வைனில் பல நல்ல குணங்கள் அடங்கியுள்ளன என்று கூறுகிறது மருத்துவ சாஸ்திரம்.

நமது உடம்பில் உள்ள இரத்தக் குழாய்களை பாதுகாக்கும் குணமும் உண்டு. அதே போல் சிவப்பு வைனை சாப்பிட்டால் இதய நோய் தாக்கும் வாய்ப்பும் குறைவு. புற்று நோய் வரு வதை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏற்படுகிறது. ரெட் வைனை' சாப்பிடு வோருக்கு இதய நோய் வருவதில்லை. இதற்கு காரணம் சிவப்பு வைன் திராட்சை பழங்கள் மூலம் தயாரிக்கப் படுகிறது. திராட்சை பழத்தின் தோலில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்' என்ற மூலப்பொருள் இதயத்தை பாதுகாக்கும் விதத்தில் செயற்படுவதே இதற்கு காரணம். மேலும் சிவப்பு வைன் சாப்பிடுவோருக்கு மறதிநோய், ஈறு நோய் ஆகியவை கட்டுப்படுகிறது. குடல் புற்று நோயை தடுக்கும் ஆற்றலும் சிவப்பு வைனுக்கு உண்டு.

வாரத்தில் ஒருநாள் 3 கப் சாப்பிடலாம். இது உடலில் உள்ள குளுக்கோஸை கட்டுப்படுத்தும். ஆனால் சிவப்பு வைனில் இருக்கும் குணங்கள், வெள்ளை வைனில் இல்லை. மிதமாக பியர் சாப்பிடுவதால் இதயத்தின் செயற்பாடு அதிகரிப்பதாக, பல்வேறு நாடுகளில் நம்பிக்கை உள்ளது.

நெய்:

இதில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சத்து உள்ளதால் நெய் சாப்பிடக்கூடாது என்ற கருத்தும் நம்மிடம் உண்டு. வயதாகி விட்டாலோ, உடம்பு குண்டாக இருந்தாலோ நெய்யை தொடவே கூடாது என்று நினைத்துள்ளோம் நாம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் மருந்துப் பொருளாக பயன்படுகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?! ஆனால் அதுதான் உண்மை. ஆயுர்வேதத்தில் இருக்கும் பல மருந்துகளில் குறிப்பிடத்தக்க இடத்தில் நெய் உள்ளது. நெய்யை சாப்பிட்டால் குண்டாவோம் என்பதும் தவறு. நெய்யை உருக்கும்போது தண்ணீர் தன்மை வெளியேறி தங்க நிறத்தில் வரும்போது, அதை சாப்பிட்டால் மாமிசத்துக்கு நிகரான சுவையை ருசிக்க முடியும். நெய்யில் இருக்கும் பீட்டா கரோட்டீன், விற்றமின் ஈ போன்றவை மூளைக்கு மிகவும் நல்லது. குடலில் உள்ள சுகர் பகுதியை பலப்படுத்தும் தன்மை உடையது நெய்.குடலில் சுரக்கக் கூடிய அமிலங்களையும் கட்டுக்குள் வைக்கிறது.

பாக்டீரியா:

இந்த பெயரைக் கேட்டாலே... நாம் ஏதோ வேறு கிரகத்திலிருந்து வந்து நம்மை தாக்கும் ஒரு உயிரினமாக நினைக்கின்றோம். பாக்டீரியா என்றாலே நோய் பரப்பும் என்ற எண்ணமே நமக்கு வரும். ஆனால் உடலில் நல்லது செய்யும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனும் பாக்டீரியாவுக்கு உண்டு.

ஜீரண சக்தியை மேம்படுத்தவும், உடல் இயக்கம் இயல்பாக இருக்கவும் உதவும் ஈஸ்ட் கலந்த உணவுப் பொருட்களான தயிர் போன்றவற்றில் நல்ல பாக்டீரியாக்களின் பங்கு தான் அதிகம்.

கோப்பி:(Coffee)

உலகம் முழுக்க அனைவரும் பருகுவது கோப்பியை... என்றாலும் அளவுக்கு அதிகமாகும்போது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதில் உள்ள காபின் என்ற மூலப் பொருளே உடலை பாதிக்கும். ஆனால் அளவோடு கோப் பியை பருகினால் நீரழிவு நோய் ஓரளவு கட்டுப்படும். குறிப்பாக பெண்களுக்கு காபின் நல்லது. தினமும் 3, 4 கப் கோப்பி பருகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். தசைகளில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்தும் சக்தி கோப்பிக்கு உண்டு. குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் கோப்பிக்கு உண்டு.
நன்றி-mangayarkesari

Wednesday, June 10, 2009

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

நன்றி-Webdunia

Monday, June 8, 2009

மாதுளையின் மகத்துவம்


மாதுளம் பழச்சாறு அருந்தினால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி, நன்கு பசி ருசி உண்டாகும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், மாதுளஞ்சாறுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்து வர, சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
அடிக்கடி மாதுளம்பழச்சாறு குடித்துவர மேனியை நன்கு பளபளப்பாக வைக்கும். சருமநோய்கள் வராது காக்கும்.
இச்சாறுடன், எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகினால் பித்தம் மொத்தமாக விலகும். கோடையில் ஏற்படும் நாவறட்சி, அதிக தாகம் தணிய மாதுளம் பழச்சாறு குடிக்கவும். உடலுக்கு நன்கு குளிர்ச்சியையும் ஏற்படுத்தும். மாதுளம் பழத்துடன், ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, மென்று தின்றால், குடல் கோளாறுகள் குணமாகும்.
இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், மாதுளஞ்சாறு பருகி வர, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மாதுளம் பழச்சாறு குடித்து, ஒரு செவ்வாழைப் பழம் தின்று வர, ஆண் மலட்டுத்தன்மை நீங்கும். விந்து உற்பத்தியையும், மொபிலிட்டியையும் அதிகரிக்கச் செய்யும்.
மாதுளைச் சாறுடன், வெங்காயச்சாறு, தேன் கலந்து குடித்துவர, சீதபேதி குணமாகும்.
மாதுளம் பழச்சாறுடன் சிறுது சீரகப் பொடியைச் சேர்த்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர, கல்லீரல் கோளாறுகள் நீங்கி நலன் பயக்கும்.
திராட்சை சாறுடன், மாதுளம் பழச்சாறு சம அளவில் கலந்து குடித்து வர, இரத்த சோகை நோய் குணமாகி, இரத்த விருத்தி ஏற்படும்.
தசைகளை நன்கு இயங்கச் செய்யும் தன்மை, மாதுளம் பழத்திற்கு உண்டு என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
மாதுளம் பழத்தோலையும், நெல்பொரி, வெல்லம் இவைகளையும் சேர்த்து கஷாயம் செய்து பருகி வர, குண்டுடம்பு மெலிந்து, உடல்வாகு நடுநிலை அடையும். இது பக்கவிளைவில்லா இயற்கை மருந்தாகும்.
மாதுளம்பழ முத்துக்களை நன்கு மென்று தின்றால் விக்கல், வாந்தி விலகும்.
நெஞ்செரிச்சல், காதடைப்பு இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது மாதுளம் பழம்.
மாதுளை முத்துக்களை, விதையோடு நன்கு மென்று தின்றால், மலச்சிக்கலைப் போக்கும்.
மலத்துடன், இரத்தம் கசிவதை குணப்படுத்தும் தன்மை மாதுளஞ்சாற்றுக்கு உண்டு.
மாதுளஞ்சாறு பருகி வர, முதியோர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
மாதுளஞ்சாறுடன் ஆப்பிள்சாறு சேர்த்துப் பருகினால், மன இறுக்கம் குறையும்.
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், மாதுளம்பழச்சாறு குடித்துவர, சிறுநீர் நன்கு பிரியும்.