Wednesday, November 5, 2008

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவை

டயாபடிஸ் (Diabetes) அல்லது சர்க்கரை நோய் என்பது பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம்.

பொதுவாக `வருமுன் காக்க' என்ற வாக்கின்படி, எந்தவொரு நோயும் வருவதற்கு முன் தற்காப்பாக இருந்து கொள்வதே சிறந்தது. ஒருவேளை நோய் வந்து விட்டது என்பதை அறிந்து கொண்டால், பதற்றப்படாமல், அதற்குரிய சிகிச்சையை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயும் அதேபோலத்தான். வீட்டில் தாய்-தந்தைக்கோ அல்லது மூதாதயர்களுக்கோ சர்க்கரை நோய் இருப்பின், அடுத்த சந்ததியினருக்கும் சர்க்கரை நோய் வரும் என்பது நியதி என்றாலும், அதற்காக அச்சப்பட வேண்டியதில்லை.

ஒரு வீட்டில் தந்தைக்கு சர்க்கரை நோய் இருந்து, அவரின் 2 மகன்களில் ஒருவருக்கு அதே பாதிப்பு இருக்கக்கூடும். அல்லது 2 பேருக்குமே சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

குறிப்பிட்ட வயதிலிருந்தே அதாவது, 20 வயது வாலிபப் பருவம் முதலே உரிய உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து வந்தால், சர்க்கரை நோய் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.

அதாவது கட்டுப்பாடின்றி இருப்பவர்களுக்கு 40 - 45 வயதில் சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்பட்டால், முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்போருக்கு அதனை சுமார் 55 வயது வரையிலும் தள்ளிப்போடலாம். எனவே பரம்பரை சர்க்கரை வியாதியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல் உழைப்பு இல்லாமையே முழுமுதற் காரணம் என்றால் மிகையில்லை.

பல மணி நேரம் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே பணியாற்றுவது, கணினி முன் அமர்ந்து ஏதாவது எண்ணெயில் வறுத்த சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டுக் கொண்டே வேலை செய்தல், அதிகப்படியான உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்தல் போன்றவற்றால் மிகக் குறைந்த வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

பரம்பரையாக தந்தை, தாய்க்கு சர்க்கரை நோய் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு சர்க்கரை நோய் வருவதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், பரபரப்பான உலகில் ஒரு சில குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
சிலருக்கு சிறு வயதிலேயே அதாவது 20-25 வயதிற்கெல்லாம் டயாபடிஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். எனவே சர்க்கரை நோய்க்கும், வயதுக்கும் சம்பந்தமில்லை.

சர்க்கரை நோயாளியான பின் என்ன சாப்பிடலாம்? எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே முக்கியம்.

சர்க்கரை நோய் என்பது உறுதிப்படுத்தப்பட்டவுடனேயே தினமும் `வாக்கிங்' செல்வதை வழக்கப்படுத்த வேண்டும். கூடுமானவரை அதிகாலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் ஏற்றது. உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பானது சக்தியாக எரியப்பட்டு, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

சர்க்கரை நோயால் உருவாகக்கூடிய பின் விளைவுகளைத் தவிர்க்க `வாக்கிங்' மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

பொதுவாக வாழைப்பழங்கள் அஜீரணத்தை குறைத்து உடலின் கழிவுகள் வெளியேற வழிவகுக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது. என்றாலும் டாக்டரின் பரிந்துரைப்படி தேவைப்பட்டால் வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

பழங்களைப் பொறுத்தவரை கொய்யாப்பழம், பேரிக்காய் ஆகியவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றவை.

அரிசி சோறு 3 வேளையும் உண்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மதியம் ஒருவேளை குறைவான அளவு அரிசி சோற்றுடன் அதிகளவில் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளும் பொறித்தவற்றை விடவும் வேகவைத்ததாக இருத்தல் சிறந்தது.

மற்ற இருவேளைகளிலும் சப்பாத்தி போன்ற கோதுமையினால் தயாரித்த உணவோ அல்லது கேழ்வரகு கஞ்சி போன்றவையோ சாப்பிடுதல் அவசியம். இதே போன்ற கட்டுப்பாடான, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு முறையைக் கடைபிடித்து அவ்வப்போது உரிய பரிசோதனைகளையும் செய்து வரும் சர்க்கரை நோயாளிகள் வேறு எந்த விளைவுகளைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை.

சர்க்கரை நோயும், உணவுப் பழக்க முறையும்

முழு அளவில் பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், கொழுப்புச் சத்து குறைந்த பால் பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் இரண்டாம் நிலை சர்க்கரை நோயில் (Type 2 diabetes) இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிய வந்துள்ளது.

இந்த வகை சர்க்கரை நோயானது உடல் பருமனுடன் தொடர்புடையது எனலாம். கட்டுப்பாடான உணவுப் பழக்க முறையால் ஆரோக்கியத்துடன் கூடிய உடல் எடையைப் பராமரித்தல் மற்றும் அன்றாட உடற்பயிற்சியால் இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

சுமார் 45 வயது முதல் 84 வயதுடைய 5 ஆயிரத்து 11 ஆண்கள் மற்றும் பெண்களிடம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையானது சர்க்கரை நோய் தாக்குதலை எந்தளவுக்கு ஏற்படுத்துகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சைக் கீரை வகைகளை அன்றாட உணவுடன் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்க முடியும்.

இந்தவகை உணவு முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவது 15 விழுக்காடு குறையும். அப்படியே சர்க்கரை நோய் ஏற்பட்டாலும் 5 ஆண்டுகள் வரை தாமதமாவது ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

அதே நேரத்தில் வெள்ளை பிரட், வறுத்த பீன்ஸ், அதிக கொழுப்புச் சத்து கொண்ட பால் பொருட்கள் போன்றவற்றால் 18 விழுக்காடு அளவுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து இருந்தது.

இதன்மூலம் உணவுப் பழக்க முறை, தொடர் உடற்பயிற்சி ஆகியவை சர்க்கரை நோயை உருவாக்கும் தன்மை கொண்டவை என தெரிய வந்தது.

ப‌க்கவாத‌த்தை‌ முன்னறிந்து தடுக்கலாம்!

ஒரு ‌விரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லகல‌ந்தகொ‌ண்பெ‌ணதனதகைக‌ளி‌லவை‌த்‌திரு‌ந்உணவு‌தத‌ட்டதவற‌விடு‌கிறா‌ர். இதஅ‌ங்‌கிரு‌க்கு‌மஅனைவரு‌மகவ‌னி‌க்‌கி‌ன்றன‌ர்.

உணவத‌‌ட்டு ‌‌கீழே ‌‌விழு‌ந்தஅ‌தி‌லஇரு‌ந்உணவு‌பபொரு‌ட்க‌ளதரை‌யி‌‌ல் ‌சி‌ந்து‌கிறது. இதனா‌லதா‌னஏதேதவறசெ‌ய்து‌வி‌ட்டதாகரு‌திஅ‌ந்பெ‌ண், ஒ‌ன்று‌மஇ‌ல்லதவ‌றி‌வி‌ட்டதஎ‌ன்றகூ‌றி அ‌ங்‌கிரு‌ந்தநழுமுய‌ன்றா‌ர்.

அ‌‌ப்போதஅவரதநடை‌யிலு‌மமா‌ற்ற‌மதெ‌ரியவஉட‌னஇரு‌ந்தவ‌ர்க‌ளமரு‌த்துவரஅழை‌க்கலா‌மஎ‌ன்றகூற, அ‌ந்பெ‌ண்ணேபு‌திகால‌ணி‌யி‌னகாரணமாக‌த்தா‌னதனதநடை‌யி‌லதடுமா‌ற்ற‌மஇரு‌‌ப்பதாக‌ககூ‌றி அ‌ங்‌கிரு‌ந்தசெ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

மாலை 6 ம‌ணி‌க்கு‌ ‌விரு‌ந்‌தி‌லகல‌ந்தகொ‌ண்டவ‌ர்களு‌க்கதொலைபே‌சி அழை‌ப்பவரு‌கிறது... அ‌ந்பெ‌ண்‌ணி‌னகணவ‌ரபேசு‌கிறா‌ர்... எ‌னமனைவ‌ி‌க்கப‌க்கவாத‌மவ‌ந்தமரு‌‌த்துவமனை‌க்கு‌கசெ‌ன்றகொ‌ண்டிரு‌க்‌கிறே‌னஎ‌ன்‌‌கிறா‌ரபத‌ட்ட‌த்து‌ட‌ன்.

ஆ‌மஇதப‌க்கவாத‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்பெ‌ண்‌ணி‌ன் ‌நிஜமான‌ககதை. அ‌ந்பெ‌ணஒரவேளை ‌விரு‌ந்‌து ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌னபோதமரு‌த்துவரஅணு‌கி‌யிரு‌ந்தா‌‌லப‌க்கவாத‌த்தை ‌நி‌ச்சய‌மதடு‌த்‌திரு‌க்கலா‌மஉ‌ரிய ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் மூல‌ம்.

உட‌லி‌லஏதேனு‌மஒரபகு‌தியேஅ‌ல்லதை, கா‌ல்களேசெய‌லிழ‌ந்தபோவதை‌ ப‌க்கவாத‌‌‌மஎ‌ன்‌கிறோ‌ம். ப‌க்கவாநோயா‌லஉ‌யி‌‌ரிழ‌ப்புக‌ளஏ‌ற்படுவ‌தி‌ல்லை‌ எ‌ன்போ‌திலு‌மபடு‌த்படு‌க்கையா‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதுதா‌னசோக‌ம்.

stroke
webdunia photoWD
ம‌னித‌னி‌னமூளை‌யி‌லஏ‌ற்படு‌மபா‌தி‌ப்புக‌ள்தா‌னப‌க்கவாத‌த்‌தி‌ற்கு‌மூல‌ககாரணமாஅமை‌கிறதஎ‌ன்றஅறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர்க‌ளகூ‌று‌கி‌ன்றன‌ர்.

மூளை‌க்கு‌‌சசெ‌ல்லு‌மர‌த்நாள‌ங்க‌ளி‌லஏதேனு‌மஅடை‌ப்பஏ‌ற்ப‌ட்டு, ர‌த்ஓ‌ட்ட‌த்‌தி‌லத‌ட‌ங்க‌லஏ‌ற்படு‌மபோதமூளை‌சசெ‌ல்களு‌க்கஆ‌க்‌சிஜ‌ன் ‌கிடை‌‌ப்பததடைபடு‌கிறது. அ‌ப்போதஅ‌ந்மூளை‌பபாக‌மஇய‌க்கு‌மஉட‌லபகு‌தி செய‌லிழ‌ந்தபோ‌கிறது. இதனஐசெ‌மி‌க் ‌ஸ்‌ட்ரோ‌கஎ‌ன்‌‌கிறா‌ர்க‌ள்.

மூளை‌க்கு‌சசெ‌ல்லு‌மர‌த்த‌ககுழா‌ய்க‌ளி‌லபா‌தி‌ப்பஏ‌ற்ப‌ட்டர‌த்போ‌க்கஏ‌ற்படு‌ம்போதஉ‌ண்டாகு‌மப‌க்கவாத‌த்தஹெமரா‌ஜி‌க் ‌ஸ்‌ட்ரோ‌கஎ‌ன்‌கிறா‌ர்க‌ள். இதஉயிரையுமபறித்துவிடக்கூடியது.
த‌ற்கா‌லிகமாஉ‌ண்டாகு‌மப‌க்கவாத‌த்தை 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌த்தகுணமா‌க்கா‌வி‌டி‌லஅதஐசெ‌மி‌க் ‌ஸ்‌ட்ரோ‌க் ‌ஆ‌கி‌விடு‌ம்.

ப‌க்கவாத‌த்‌தி‌ற்கஅ‌றிகு‌றிக‌ளஉ‌ள்ளன. ப‌க்கவாத‌மவருவத‌ற்கு 3 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்ன‌ரஇத‌ற்காஅ‌றிகு‌றிக‌ளதெ‌ரி‌ந்து ‌விடு‌ம். அ‌ப்போதஅவ‌ர்களமரு‌த்துவமனை‌க்கு‌ககொ‌ண்டவ‌ந்தா‌லஅவ‌ர்களபெ‌ரிபா‌தி‌ப்‌பி‌லஇரு‌ந்தகா‌ப்பா‌ற்‌றி ‌விடலா‌மஎ‌ன்று‌மந‌ம்‌பி‌க்கஅ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர்.

அதஎ‌ன்அ‌றிகு‌றிக‌ள்... நமதஉட‌லி‌லஏதேனு‌மஒரபகு‌தி‌யி‌லஏ‌ற்படு‌மநடு‌க்க‌ம், மர‌த்துவிடும்‌த‌ன்மபோ‌ன்றவைதா‌னஅவஎ‌ன்‌கி‌ன்றன‌ர்.

stroke
webdunia photoWD
அதாவதஒருவரு‌க்கு ‌திடீரெகைக‌ளமர‌த்துவிடுவதபோ‌ன்றோ, கா‌ல்க‌ளி‌லநடு‌க்க‌மம‌ற்று‌மநட‌க்முடியாத‌தத‌ன்மை, வா‌யகுளறு‌த‌ல், ப‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ற்பவ‌ர்களச‌ரியாஅடையாள‌மகாமுடியாத‌தத‌ன்மை, ஞாபச‌க்‌தி குறைத‌ல், க‌ணபா‌ர்வம‌ங்குத‌லபோன்அ‌றிகு‌றிக‌ள் 3 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்பதெ‌ரி‌ந்து ‌விடு‌ம்.

அ‌ந்சமய‌த்‌தி‌லஅவ‌ர்களநாமப‌ரிசோ‌தி‌க்கலா‌ம். அதாவதஅவ‌ர்க‌ளிட‌மச‌த்தமாக ‌சி‌ரி‌க்சொ‌ல்லு‌ங்க‌ள், 1 ‌நி‌மிட‌மஏதாவதபேச‌சசொ‌ல்லு‌ங்க‌ள், இர‌ண்டகைகளையு‌மமேலதூ‌க்க‌சசொ‌ல்லு‌ங்க‌ள்.

இ‌தி‌லஏதாவதஒ‌ன்‌றி‌லஅவ‌ர்களு‌க்கு ‌பிர‌ச்‌சினஇரு‌ந்தாலு‌மஅவ‌ர்களஉடனடியாஅரு‌கி‌லஉ‌ள்மரு‌த்துவமனை‌க்கு‌ககொ‌ண்டசெ‌ன்று ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்ஏ‌ற்பாடசெ‌ய்யு‌ங்க‌ள்.

த‌ற்போதம‌ற்றொரஅ‌றிகு‌றியு‌மஇரு‌க்கலா‌ம். அதாவதஅவரதநா‌க்கை ‌நீ‌ட்ட‌சசொ‌ன்னா‌லஅதஏதாவதஒரப‌க்கமாம‌ட்டுமே ‌‌நீளு‌ம். நேராக ‌நீ‌ட்முடியாம‌லபோவது‌மஉ‌ண்டு. இதுவு‌மப‌க்கவாத‌த்‌தி‌ற்காஅ‌றிகு‌றி தா‌ன். எனவப‌க்கவாத‌மப‌ற்‌றிச‌ந்தேக‌மஎழு‌ந்தா‌லஉடனடியாமரு‌த்துவமனை‌க்கு ‌செ‌ன்று ‌சி‌கி‌ச்சஎடு‌த்து‌ககொ‌ள்வது ‌சிற‌ந்தது.

ப‌க்கவாத‌த்தகுணமா‌க்மா‌த்‌திரைகளு‌ம், அறுவை ‌சி‌‌கி‌ச்சமுறைகளு‌மஉ‌ள்ளன. செய‌லிழ‌ந்பகு‌திகளு‌க்கு‌ககொடு‌க்க‌ப்படு‌மதொட‌ரப‌யி‌ற்‌சிகளு‌மப‌க்கவாத‌த்தகுண‌ப்படு‌த்உதவு‌ம்.

சி‌ன்ச‌ந்தேக‌மஏ‌ற்ப‌ட்டாலு‌மதாம‌தி‌க்காம‌லமரு‌த்துவமனை‌க்கவ‌ந்தா‌லஒருவரதவா‌ழ்‌க்கையையே‌ககா‌ப்பா‌ற்‌றி‌விடலா‌ம். தாம‌தி‌க்கு‌மஒ‌வ்வொரு ‌நி‌மிட‌மு‌மவா‌ழ்‌க்கையை ‌மீ‌ட்டு‌ததருவ‌தி‌லஅ‌திக ‌சி‌க்கலஏ‌ற்படு‌த்து‌ம்.

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.

உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.

உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.

ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity) கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.

ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.

இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.

சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.

கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!

நீரிழிவுக்கு தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி

நீரிழிவு நோயாளிகள் தீட்டப்படாத புழுங்கல் அரிசியை உட்கொண்டால் நல்லது என்று மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.

இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை 2025-ம் ஆண்டு 7 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவது நிச்சயம் ஆனால் பெற்றோருக்கு இல்லாமலும் இப்போது உள்ள உணவு பழக்க வழக்கத்தினாலும் உடற்பயிற்சி இல்லாததாலும் நீரிழிவு நோய் வருகிறது.

முந்தைய காலத்தில் அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்களையும் அதன் தவிட்டுசத்துபோகாமல் கையால்குத்தி சமைத்து உட்கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது நன்றாக தீட்டி அதாவது பாலிஷ் செய்து சாப்பிடுகிறோம். அதனால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடுகின்றன.

எனவே எல்லோரும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சிவப்பு அரிசி அதிலும் கைகுத்தல் அரிசியை சமைத்து உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது. அதிலும் அதிகமாக வேகவைக்காமல் சோறு சிதைந்து போகாத வகையில் சாப்பிடுவது நல்லது. எளிதில் ஜீரணமாகாத வகையில் சோறு இருப்பது நல்லது.

கீரைகளையும் பீன்ஸ், கேரட், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகளும் சாப்பிடலாம்.

ஆனால் உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து கிழங்கு வகைகளை சாப்பிடக்கூடாது.

எண்ணையை பொறுத்தவரை நல்லெண்ணை, கடலை எண்ணை சேர்த்துக்கொள்ளலாம். பச்சைபயறு, பயறு, உளுந்து உள்ளிட்ட அனைத்து பயறுகளையும் வேகவைத்து அல்லது முளை கட்டி வேகவைத்து சாப்பிடுவது நல்லது. நாவல்பழம், கொய்யாபழம், பப்பாளிபழம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. மாம்பழத்தை ஆசைப்பட்டால் சிறிதளவு சாப்பிடலாம்.

முட்டையை அவித்து அதன் வெள்ளைக்கருவை சாப்பிடலாம். மீன், கோழிக்கறி ஆகியவற்றை சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் தினமும் மல்டி வைட்டமின் மாத்திரை சாப்பிடுவது நல்லது என்று அவர் தெரிவித்தார்.



சாதிக்காயின் மருத்துவ குணங்கள்

சாதிக்காய் என்பதற்கு குலக்காய், ஜாதிக்காய் அட்டம், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் இருக்கின்றன. சாதிக்காய்க்கு தாவரவியல் வழங்கும் பெயர் மைரிஸ்டிகா அஃபியனாலிஸ் அல்லது மைரிஸ்டிகா ஃப்ராக்ரன்ஸ் எனப்படும். இது ஒரு மர இனத்தை சேர்ந்தது. சாதிக்காய் பழத்தில் கொட்டையின் ஓட்டினுள்ளே இருக்கும் பருப்புதான் சாதிக்காய் என்று உபயோகிக்கப்படுகிறது. இதனை உணவு தயாரிப்பில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் சுவை : துவர்ப்பு, தன்மை : வெப்பம்.

சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன.

சாதிக்காய் உடலை வலிமையாக்கும்.

வாயுவினால் வயிறு உப்பசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அசீரண மந்தம், வாந்தி பேதியின் போது அதிக தாகம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல், தூக்கமின்மை.

பெண்களுக்கு : மாத விலக்கின் போது வயிற்று வலி. அதிக உதிரப்போக்கு.

ஆண்களுக்கு : விந்துக் குறைவை போக்குகிறது.

சாதிக்காய் எண்ணெய்(தைலம்), பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.

ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் சாதிக்காயிலிருந்து வீரியப்படுத்தி (பொடன்சி) தயாரிக்கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க்குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.

மனக்குறிகள் : தோல்வியான சம்பவங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் அதிக மன வேதனையால் மன நிலை பாதிப்பு (லிபோதைமியா).

நினைவாற்றல் குறைப்பாட்டிற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

1. புரதம், மாவு சர்க்கரைப் பொருள் அடங்கிய க்ளைகோ ப்ரோட்டீன் என்னும் சத்துப்பொருள் மூளையில் குறைந்து இருப்பது. அதாவது, இந்தச் சத்துப் பொருள் மூளையின் வெளிப்பகுதியில் (செரிப்ரல் கார்டெக்ஸ்), நரம்பு செல்களிலும் (நியூரான்), நரம்புகளிலும் நினைவுகளை அனுப்புவதில் ஊக்கமுடன் செயல்படச் செய்கிறது.

2. மூளையில் (தலைமிதழ்), ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பிற்கு (ஆக்ஸான், டென்ட்ரான்) தகவல்கள் கடந்து செல்லும்போது (டிரான்ஸ்மிஷன்), இரண்டு நரம்புகளும் இணையும் இடத்தில் (சைனாப்ஸ்) நினைவுகளின் உணர்ச்சி வேகம் (இம்பல்ஸ்) தாமதமாக செயல்படுவதால் ஞாபகம் உடனே வருவதில்லை.

விபத்தினாலும் அல்லது சில மருந்து வகைகள் சாப்பிட்டதாலும், கண்களில் கருவிழிக்கு (ஐரிஸ்) நடுவில் இருக்கும் கண்மணி (பியூபில்) என்னும் உறுப்பு, அதிக அளவில் விரிந்திருக்கும் கண் நோய், கண்மணியில் செயல்படும் தசைகள் (ஸ்பிங்டர் மஸில்) பாதிப்பினால் ஏற்படுகிறது.

மேற்கண்ட இரண்டு பாதிப்புகளுக்கும் (ஞாபக மறதி, கண் நோய்) நக்ஸ்மாஸ்சாடா என்னும் மருந்து செயல்படுகிறது.

பெண்களுக்கு : சீரற்ற காலத்தில் கொஞ்சமாகவும், அதிகமாகவும் மாறுதலாக வெளியாகும் மாதவிடாய்ப் போக்கு, நீடித்திருக்கும் மாதவிடாய் (மெனோஸ்டேக்ஸிஸ்) மாதவிடாய் வராத காலத்திலும் கருப்பையில் உதிரப்போக்கு, இரத்தமுடன் வெள்ளைப்படுதல் (லியுகோரியா).

இதர நோய்க்குறிகள் :

வாத நோயில், வலது இடுப்பிலிருந்து, வலது முழங்கால் மூட்டு வரை வலி, குறிப்பாக மாடியில் ஏறும்போது அதிக வலி, அசைவுகளால் வலி அதிகம், நடப்பதற்கு தடுமாறுதல் (ஸ்டேகர்).

தொண்டை வறட்சி, வயிற்றில் அதிகக் காற்று சேர்ந்து வயிறு உப்புசமாகவும், அசீரணக் கோளாறும் (டிஸ்பெப்சியா) இருக்கும்.

தூக்கமின்மையால் சில நோய் பாதிப்புகள், தூங்கியவாறு சோம்பி இருத்தல், உணர்வற்ற நிலையில் (கோமா/ஸ்டூபர்) இருத்தல்.

சில வகை கீரைகளின் மருத்துவ குணங்கள்

முருங்கைக்கீரை- இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை வளர்ப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு நீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.

புளிச்ச கீரை: உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.

சிறுகீரை- உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிகலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.

வெந்தயக்கீரை- முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.

அரைக்கீரை: நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தை பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

அகத்திக் கீரை-வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.


பசலைக்கீரை-பருப்புக்கீரை

குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக்கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.

மணத்தக்காளி கீரை- அல்சரை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டாஇ நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை- உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

குமட்டிக் கீரை- இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப் படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.

தொய்யல் கீரை- தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது, செரிப்பாற்றலை மிகுவிக்கும், மலச்சிக்கலை போக்கும், வாத நோயாளிக்கு ஏற்றது, பேறு காலத்திற்கு பின்பு மகளிர் சாப்பிட ஏற்றது. உடலைத் தேற்றும்.

திக்குவாயிலிருந்து மீளுதல் - சில யோசனைகள்

உலகில் இன்று மொத்தம் 45 மில்லியன் மக்கள் திக்குவாய் குறையுடன் இருக்கிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் இருக்கிறார்கள். இது குறிப்பாக ஆண்களுக்கே அதிகம் வருகிறது. திக்குவாய் உள்ளவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்களே. இதில் 65 சதவீதத்தினருக்கு பரம்பரை மூலம் எற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெர்விக்கின்றன. எது எப்படி இருப்பினும் 5 வயதுக்கு முன்னரே திக்குவாய் தொடங்கி விடுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காதபோது 10 அல்லது 18 வயதில் இது உச்ச நிலையை அடைகிறது. இது பிற்பாடு நிலையாக இருந்துவிடலாம் அல்லது மறைந்து விடலாம்.

திக்கிப் பேசுபவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் ஒரு சில கணத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் அறியாமல் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுவது, நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, பேச்சொலியில் நிறுத்தம் ஏற்படுதல். திக்குவாய் பொதுவாக நரம்பியல் நேரம் தவறுதலால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது பேசும்போது திக்குபவர்கள் எப்போது தான் நினைத்ததை கூறுவது என்பதில் நரம்பியல் நேரம் தவறுகையால் குழப்பமடைகிறார்கள். பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல பேசும்போது மனம், உடல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்.

அனைத்து உடல் செயற்பாடுகள் போலவே பேச்சும் நரம்பு-தசை ஒருங்கிணைப்பால் நிகழ்வதே. மூளையின் மின் ரசாயன செய்திகளை குறிப்பிட்ட தசை குழுவிற்கு அனுப்புவதில் நரம்பு-தசை ஒருங்கிணைப்பு ஈடுபட்டுள்ளது. சில சமயங்களில் உணர்ச்சி நிலைகளில் கட்டுபாடுகளை ஏற்படுத்த முடியாத சூழ் நிலையில் நரம்பு-தசை அமைப்பு செயல் தடைபடுகிறது. இது சாதாரண பேச்சு உள்ளவர்களை விட திக்கு வாய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தடைபடுகிறது. தனக்கு அச்சமூட்டுவதாக அவர் நினைக்கும் சூழலில் திக்குவாய் உள்ளவர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மன தடையால் நரம்புகள் ஒத்துழைக்காமல் சுருங்குவதால் பேச்சுத் தடை ஏற்படுகிறது.

உணர்ச்சி நிலையில் ரிலாக்ஸாக இருக்கும்போது திக்குவாய் உள்ளவர்களும் சரளமாக பேசுவதை நாம் பார்க்க முடியும். மன அழுத்த சூழ்நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளியில் அட்டன்டன்ஸஎடுக்கும்போது, தொலை பேசியில் பேசும்போது, சிலரிடம் அதிகாரமாக பேசும்போது, குழுவில் பேசும்போது, வேலை நேர்முகத் தேர்வின் போது, என்று இவர்களுக்கு நெருக்கடி நிலைகள் அதிகம்.

எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்தவார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை. உரையாடலின் போது இது போன்ற நன்மை இல்லையாதலால் அடுத்த வார்த்தையை யோசிக்கும் தருணத்தில் பேச்சு தடுமாற்றம் ஏற்படுகிறது, இது திரும்ப திரும்ப நடக்கும்போது பயம் தோன்றி மேலும் திக்குதலை அதிகமாக்குகிறது. மற்றபடி அவர்கள் மற்ற மனிதர்களை போல்தான். சிலர் அதி புத்திசாலிகளாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

சில மன நோய் நிபுணர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து மன அழுத்தத்தை குறைத்தால் பேச்சு சரளமாக வரும் என்று அத்தகைய மாத்திரைகளை தருகின்றனர். ஆனால் இது பிரச்சனிகளை மேலும் சிக்கலாக்குவதாக பேச்சு பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். திக்குவாய்க்கு ஹிப்னாடிஸ சிகிச்சையும் பெரிய பலன்களை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஹிப்னாடிச மயக்கத்தில் சரளமாக பேசும் திக்கு வாய்காரர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டதும் திக்கி பேச துவங்கிவிடுகின்றனர். யோகா மற்றும் தியானம் ஆகியவைகளில் உணர்வு மற்றும் புத்திசார்ந்த நிலைகளில் மேலதிக சம நிலை ஏற்படுவதால் திக்குவாய்க்கு இந்த பயிற்சிகளே சிறந்தது. பேச்சு எப்படி இயல்பானதோ திக்குவதும் இயல்பானதே இது பெரிய நோய் என்றெல்லாம் கூறமுடியாது, எனவே சில பல வாழ் முறை நடைமுறை அளவுகோல்களிலேயே இதை தீர்க்க முடியும்.

திக்குவாய் உள்ளவர்களிடம் பேசும்போது நாம் எந்த வித அணுகுமுறையைக் கொள்ளவேண்டும் என்பது கீழ்வருமாறு :

என்ன கூறுகிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி கூறுகிறார் என்பது முக்கியமல்ல.

பொறுமையாக கேட்கவேண்டும், அவர்களை அவசரப்படுத்துவது கூடாது.

பேசும்போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கவேண்டும்.

இவர்களுக்கு பேச்சில் தடையே தவிர சொல்ல வரும் விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. எனவே அவர்கள் குழப்பமுள்ளவர்கள் என்று கருதுவதை தவிர்க்கவேண்டும்.

தொலைபேசியில் இவர்கள் பேசும்போது நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் ஃபோன் லைனை துண்டித்து விடவேண்டாம்.

திக்குவாய் உள்ளவர்கள் தங்களை கேட்பவரிடமிருந்து தங்கள் திக்குவாய் கோளாரை மறைக்க விரும்புவது வழக்கம். ஆனால் இதனால் மேலும் பேச்சு தடைகள் அதிகரிக்கவே செய்யும்.

இறுதியாக கூறவேண்டுமானால் திக்குவாய் உள்ளவர்கள் பேச்சு பயிற்சியில் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சரளப் பேச்சு கைகூடிவிடும். பொறுமையாகவும் விஞ்ஞான முறைப்படியும் தொழில்பூர்வமானவர்களின் வழிகாட்டுதலில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வரமுடியும்.

உடலுக்கு உகந்த பாகற்காய்!

பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.

அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாவிக்குத்தான் கசப்பேத் தவிர உடலுக்கு இனிப்பானது.

பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

இதேப்போல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

மஞ்சள், மிளகுப் பாலின் மகத்துவம்!

`இயற்கையை மீறி எதுவும் நடக்காது'; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்' - இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.

இப்படித்தான் ஒரு நண்பர் வேலநிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார்.

பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.

கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.

``என்ன தம்பி, இப்படி இருமுறீக... என்ன உங்களுக்கு உடம்புக்கு...?''

``ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி''

``அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்'' - என்றார் பெரியவர்.

அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர்.

சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

வாயுத் தொல்லையைப் போக்கும் வெள்ளைப் பூண்டு

இயற்கை வைத்தியம் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தப் பகுதியில் அறிந்து வருகிறோம்.

ஏற்கனவே மிளகு, மஞ்சள் பால் பற்றி அறிந்தோம். தற்போது வெள்ளைப் பூண்டு பற்றி அறிவோம்.

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.

ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும்.

வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.

முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.

பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.

எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

உடல் சூட்டைத் தடுக்கும் நல்லெண்ணெய்

நல்லெண்ணெய். இதன் பெயரிலேயே அதன் சிறப்பு உள்ளது.

நல்லெண்ணை அல்லது எள் எண்ணெய் என்று நாம் இதனைக் கூறுகிறோம். எள் என்பது பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது.

எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயே நல்லெண்ணெய். பொதுவாக கிராமங்க்ளில் ஒரு பழமொழி கூறுவார்கள்.

``வைத்தியருக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வாணிபருக்குக் கொடுக்கலாம்''- என்பதே அது.

அதாவது வைத்தியர் - டாக்டரிடம் செல்லாமல் இருப்பதற்கு, எண்ணெய் விற்கும் வாணிபருக்கு பணம் கொடுக்கலாம். எனவே அதிக எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தினால், வைத்தியச் செலவு இருக்காது என்பதே நம் முன்னோர் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.

உடல் சூட்டைத் தணிப்பதில் நல்லெண்ணெய் முக்கியப் பங்கினை வகிக்கிறது.

உடல் சூட்டால் வயிறு எரிச்சல், மலச் சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒருவித பாரத்துடனான தலைவலி போன்ற எண்ணற்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க நன்றாகத் தேய்த்து, இளஞ்சூட்டில் வெந்நீர் வைத்து, நல்ல சீயக்காயைத் தேய்த்துக் குளிப்பதே.

`சனி நீராடு' என்பதன் பொருளும் அஃதே. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர மேனிக்கு புதுப்பொலிவையும் நல்லெண்ணெய் அளிக்கிறது.

இதன் காரணமாகவே பெண்கள் பூப்பெய்தவுடன் நல்லெண்ணெயுடன் உளுந்தில் செய்யப்பட்ட கழியையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள். உளுந்தும் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், உடலின் சூட்டைத் தடுக்கவே இவற்றைத் தருகிறார்கள்.